இலக்கியம் விற்பனைக்கு
சந்து பொந்துக்குள் வெறும் தட்டியில் பெயர்ப்பலகை வைத்திருக்கும் உணவகங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பது எப்படி? ஏகோபித்த ஆதரவு வரலாறு காணாத வெற்றி என்று போஸ்டரடித்து சினிமாக்களையே ஓட்ட முடியாதபோது, வெறும் எண்ணிக்கையக் கூட்டிச்சொல்லியா இலக்கியத்தை விற்றுவிட முடியும்? அல்லது விற்பனை எண்ணிக்கையை வைத்து நிர்ணயிக்கக்கூடியதா தரம்?இலக்கியம் கூவி விற்பதல்ல, தேடி வாங்குவது. வாசக ருசியால் பரவுவது, வாய்க்கு ருசியாகத் தந்தால் தட்டியில்கூடப் பெயர் தேவையில்லை என்பதே என்றைக்குமான சத்தியம்.
தமிழில் இலக்கிய வெற்றி என்பது தரத்திலிருந்து நகர்ந்து, எண்ணிக்கையின் ஏணியில் ஏறத்தொடங்கியது எப்போது? இதில் இணையத்து நுணிப்புல் மேயலின் பங்கு என்ன?
